மேலும் அறிய

சென்னையில் வங்கி செக்யூரிட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை கொள்ளை

காலையில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது

சென்னை திரு.வி.க நகர் திருவள்ளுவர் குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் கவுல் பாஷா (48). இவர் கடந்த 3 மாதமாக மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ வில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். மாலையில் கவுல் பாஷா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 

சென்னையில் வங்கி செக்யூரிட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை கொள்ளை
 
உடனடியாக இது குறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரோவை சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தடயவியல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை பதிவுகளை எடுத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

 
வயதான முதியவரிடம் கவனத்தை திசை திருப்பி தங்க நகை மற்றும் பணம் பறிப்பு
 
சென்னை கொடுங்கையூர் வேளாங்கண்ணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சந்தன பாண்டி வயது (58). இவர் மூலக்கடையில் உள்ள முத்தூட் பைனான்சில் இருந்து 3 சவரன் தங்க நகை மற்றும் 56,000 பணம் எடுத்துக் கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தில் மாதவரம் செங்குன்றம் நெடுஞ் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் கிளையின் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு ஸ்டேட் பேங்க் ATM ல் 30,000 பணத்தை டெபாசிட் செய்து விட்டு வெளியே வந்து  இரு சக்கர வாகனத்தின் டேங்க் கவரில் பையை வைத்துள்ளார்.
 

சென்னையில் வங்கி செக்யூரிட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை கொள்ளை
 
அப்போது மர்ம நபர் ஒருவர் முதியவரின் முதுகில் தட்டி பணம் கீழே கிடப்பதாக கூறியுள்ளார். கீழே கிடந்த பணத்தை எடுக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றோரு நபர் டேங்க் கவரில் வைத்திருந்த 26,000 பணம் மற்றும் 3 சவரன் நகை உள்ள பையை எடுத்துச் சென்று விட்டார். இது குறித்து முதியவர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget