மேலும் அறிய

பிழைக்க வழி தெரியாததால் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடி சாவாரி ஓட்டிய நபர் கைது

’’எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் சம்பவத்தன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திருடி சென்று தினமும் அதை சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்’’

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி. என்.டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (36). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 6ஆம் தேதி இரவு 10 மணிக்கு சவாரி முடித்து விட்டு ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்த் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் ஆனந்த் நேற்று எழும்பூர் பகுதி அருகே தனது ஆட்டோவை வேறு ஒரு நபர் ஓடிச் செல்வதை பார்த்தார். உடனடியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவை பிடித்து ஆட்டோ ஓட்டி வந்த நபரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
 
கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் மாதவரம் தபால் பெட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35) என்பதும், இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. தற்போது எந்த வேலையும் இல்லாத காரணத்தினால் சம்பவத்தன்று சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திருடி சென்று தினமும் அதை சவாரி ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

 
காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்த குடோனுக்கு சீல் - 15 லட்சம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்
 

பிழைக்க வழி தெரியாததால் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடி சாவாரி ஓட்டிய நபர் கைது
 
சென்னை புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில்  சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த கலைமணி வயது 45 என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கிருந்து  சென்னையின் பெரும்பாலான கடைகளுக்கு குளிர் பானங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்குள்ள குளிர்பானங்கள்  காலாவதி ஆகி இருப்பதாகவும் அவை விற்பனை செய்யப்படுவதாகவும் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து அவரது தலைமையில் பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெபராஜ் மற்றும் ஜெயகோபால் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
 

பிழைக்க வழி தெரியாததால் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடி சாவாரி ஓட்டிய நபர் கைது
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார்; இதில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குளிர் பானங்கள் காலாவதி ஆன நிலையில் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தெரிய வந்ததாகவும் , அதை தொடர்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைத்து  உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சதிஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Top 10 News Headlines: பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
பொங்கல் சிறப்பு ரயில்கள், பிரதமர் மோடி புகழாரம், ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Bigg Boss Tamil: ”பீடை பாரு, பொறுக்கி கம்ருதின்”.. வாயடைக்கச் செய்த திவ்யா - ஃபயர் விடும் நெட்டிசன்கள்.. வீடியோ
Embed widget