மேலும் அறிய

Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை.! 2 குற்றவாளிகள் சிக்கியது எப்படி.? வெளியான ஷாக் தவகல்

Kovai Girl murder case : கோவை சிறுமி கொலை வழக்கில் கார்த்திக் மற்றும் ராஜ்குமார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளி கார்த்திக் சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து தேடியது போல் நடித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

கோவையில் 10 வயது சிறுமி கொலை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள நிலையில்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பாத காரணத்தால் பெற்றோர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் சிறுமியை அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சிறுமி உடல்

இதனையடுத்து கோவை சூலூர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அப்போது போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் என்ற பகுதியில் சிறுமி ஒருவருவரின் உடல் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, குளத்தில் வீசிவிட்டு சென்ற கொடூரம் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

கொலை செய்தது யார்.?

இந்த நிலையில் சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும், மேலும் சிறுமி விளையாடிய பகுதியில் உள்ள மற்ற சிறுவர்கள், மொபைல் டவர் மூலமாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்திய நிலையில்,  சிறுமியை இந்த 2 பேர் தான் அழைத்து சென்றதாக சிறுமியோடு விளையாடிய மற்ற சிறுவர்கள் காட்டிக்கொடுத்தாக கூறப்படுகிறது.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி.?

இதனையடுத்து கோவை சிறுமி கொலை வழக்கில்  நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில்  வசித்து வரும் கார்த்தி (33) என்பவனையும், அவனுக்கு உதவியதாக மோகன்ராஜூம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கார்திக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகில் வசித்து வந்ததும், சிறுமி காணமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோருடன் சேர்ந்து கார்த்திக்கும் சிறுமியை தேடியது போல நடித்து நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில் குற்றவாளி கார்த்திக்கின் கால் எலும்பு முறிந்துள்ளது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Embed widget