உலக சுகாதார தினம் - முக்கியத்துவம் என்ன?
1948-ல் ஜெனிவானில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டில் உலக சுகாதார அமைப்பு (WHO) நிறுவப்பட்டு உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது.
அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் நிகழும் சுகாதார பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்யும் முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட 77வது ஆண்டு ஆகும்.
“Healthy beginnings, hopeful futures” என்பது இந்தாண்டிற்கான கருப்பொருள்.
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும்.
அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.
வளர்சிதை மாற்றம், செரிமான மண்டல ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஆகியவற்றிற்கு உதவும் வகையில் உணவு சாப்பிடுவது நல்லது.
சரிவிகித உணவு முறை, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நல்லது.