போப் ஃப்ரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்!
உலகளாவிய கிறிஸ்துவ மதத்தின் தலைவரான போப் ஃபிரான்சிஸ், நுரையீரல் தொற்று காரணமாக 2025 பிப்ரவரி 14 ஆம் தேதி , ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
88 வயதான அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவர் சுவாசிப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொண்டார்.
இதனால் மருத்துவர்கள் அதிக ஓட்ட ஆக்ஸிஜன் ஆதரவை வழங்க வழிவகுத்தனர். கூடுதலாக, மருத்துவ வல்லுநர்கள் ரத்த சோகை தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து இரத்தமாற்றம் செய்தனர்.
பிரான்சிஸ் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் செப்சிஸ் எனப்படும் ரத்தத்தில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும்.
இது நிமோனியாவின் சிக்கலாக ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவாசப் பிரச்சினைகள் மற்றும் வயது முதிர்ச்சியால், செப்சிஸிலிருந்து மீள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 1936 ஆம் ஆண்டு பிறந்த போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.
போப் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
போப் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.