வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க சில டிப்ஸ்!
நல்ல புத்தக வாசிப்பு ஒருவரின் வாழ்வையே மாற்றிவிடும்; மனதை பண்படுத்தும்; கோடை விடுமுறை நாட்களைப் பயனுள்ள வகையில் மாணவர்கள் பயன்படுத்த வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம்.
பணி சூழல், அன்றாட வேலை என பெரியவர்களுக்கும் படிப்பதற்கு நேரம் இல்லாத நிலை ஏற்படும். வீட்டில் பெற்றோர்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே அதை குழந்தைகளும் பின்பற்றுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் என்பதை கண்டறிய வேண்டும்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது நல்லது. வாய் விட்டு வாசிப்பது கவன சிதறல் ஏற்படாமல் தடுக்கும்.
புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 15 நிமிடங்களாவது வாசிக்கலாம். இது பழக்கமாக மாறிவிடும்.
வாசிக்கும் நேரங்களில் செல்ஃபோன் அருகில் இருக்க வேண்டும். ஆன்லைனில் வாசிப்பது எனில், ஆஃப்லைன் மோடில் வாசிக்கலாம். இல்லையெனில், கவனம் சிதறி வேறு ஏதாவதை பார்க்க நேரிடலாம்.
விரும்பிய துறைகளில் உள்ள புத்தகங்களை பட்டியலிட்டு வாசிக்க திட்டமிடலாம். வேலைக்கு எடுத்துச் செல்லும் பைகளில் ஒரு புத்தகத்தை வைத்திருக்கலாம். அலுவலகம் செல்லும் பயணங்களில் சாத்தியப்பட்டால் வாசிக்கலாம்.
வீட்டில் புத்தகம் வாசிப்பதற்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கலாம்.
புத்தகம் வாசிப்பதை பழக்கமாக மாற்றிவிட்டால் எளிதாகிவிடும். தினமும் 10 பக்கங்கள் என படிக்க தொடங்கினால் அதிக பக்கங்கள் வாசிப்பதை எட்டிவிடலாம்.
ஒரு நாளைக்கு 25 -50 பக்கங்கள் என்று திட்டமிடுவது நல்லது.