காலமானார் போப் ஃபிரான்சிஸ் !
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார்.அவருக்கு வயது 88.
சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். உடநிலை சற்று தேறிவந்த நிலையில், இன்று (21.04.2025) அ இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் காலமானார் என்று வாடிகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 1936 ஆம் ஆண்டு பிறந்த போப் பிரான்சிஸின் இயற்பெயர் Jorge Mario Bergoglio. 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
இவர் வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ஸ்பானிஷ்,Piedmontese, உக்ரைன், ஃபிரெஞ்ச், ஜெர்மன், லத்தீன், போர்ச்சுல் அகைய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர்.
போர் எதற்கும் தீர்வு கிடையாது என்பதில் நம்பிக்கை கொண்டவர். காஸா மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
முதல் லத்தீன் அமெரிக்க போப்! ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி 266வது போப்பாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
”எல்லா நபர்களும் கடவுளின் குழந்தைகள், எல்லா நபர்களும். கடவுள் யாரையும் நிராகரிப்பதில்லை.” என்று தெரிவித்தவர்.
போப் ஃபிரான்சிஸ் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.