மலையேற்றம் செல்ல விருப்பமா? இந்த இடத்தை லிஸ்ட்டில் சேருங்க!
மலை சார்ந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டம் இருப்பவர்களுக்கு சென்னைக்கு அருகில் இருக்கும் மாமண்டூர் சிறந்த தேர்வாக இருக்கும்.
சென்னை அருகே பார்க்க வேண்டுமென்றால், நீங்கள் வரவேண்டியது மாமன்று காடுகளுக்கு தான். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் மூங்கில் காடுகள், அரிய மரங்களுக்கு நடுவே பச்சை நிற தெளிந்த நீர் பார்ப்பதற்கே இயற்கை அன்னையின் கலை படைப்பு போல் காட்சியளிக்கும்.
ஆந்திரப் பிரதேச மாநில வனத்துறையினர் கட்டுப்பாட்டில் மாமண்டூர் காடுகள் உள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆந்திர வனத்துறையினர் பல்வேறு பேக்கேஜ்கள் வைத்துள்ளனர்.
ட்ரெக்கிங், கேம்பிங், பாரஸ்ட் சஃபாரி, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கின்றன. குழந்தைகளுடன் சென்றால் விளையாடுவதற்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
சென்னை கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. திருப்பதிக்கு சென்று விட்டு இந்த இடத்திற்கு வரலாம்.
இந்த பகுதிகளுக்கு செல்வதற்கு சொந்த கார் மூலம் வருவது சிறந்தது. அல்லது திருப்பதியில் இருந்து, கேப் அல்லது வேன் மூலமாகவும் வரலாம்.
நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கார் பார்க் செய்ய 20 ரூபாய், வேன்களுக்கு 30 ரூபாய் மற்றும் பைக்குக்கு பத்து ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மலையேற்றத்துடன் கூட இயற்கையுடன் அழகான நினைவுகளுடம் வீடு திரும்பலாம்.
குழந்தைகளுடன் பாதுகாப்பாக சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு, மாமண்டூர் காடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.