இந்து சமயத்தின் முக்கியமான விழாக்களுள் ஒன்று மஹாசிவராத்திரி.
சிவபெருமானுக்கு உகந்த நாளான மஹாசிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அன்று சிவன் என்றும் அழியாத நித்திய பிராணனை பிரதிபலிக்கிறார் என்று நம்பப்படுகிறது.
சிவபெருமானை வணங்கும் பக்தர்கள் சிலர் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
அபிஷேகப் பொருட்களான பால், தேன், நெய், நீர் போன்றவற்றை கொண்டு சிவலிங்கத்தை முதலில் அபிஷேகம் செய்வர்.
பின் அன்று இரவு முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அடுத்த நாள் காலையில் பால், பழங்கள் போன்ற உணவு அருந்தி விரதத்தை முடித்துக்கொள்வர்.
இந்த ஆண்டின் மஹாசிவராத்திரி பிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.