மகா சிவராத்திரி எப்போது? விரத நன்மைகள் என்ன?
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக திகழ்வது மகாசிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
மகாசிவராத்திரி 2025 பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் 26ம் தேதி காலை 10.18 மணிக்கு சதுர்ததி திதி பிறக்கிறது.
மகாசிவராத்திரி என்றால் அன்றைய தினத்தின் இரவில் பக்தர்கள் கண்விழித்து சிவாலயங்களில் நடக்கும் சிவ பூஜையில் பங்கேற்பது வழக்கம்.
சிவராத்திரி தினத்தில் பூஜை செய்பவர்கள் 26ம் தேதியே செய்ய வேண்டும். மேலும், சிவாலயங்களில் வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவு நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்று ஈசனை மனதார வழிபட வேண்டும்.
மகாசிவராத்திரி தினத்தில் இந்தியா முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வீட்டில் சிவபெருமானுக்கு பூஜை செய்து, விரதம் இருந்து வழிபடலாம்.
’ஓம் நமசிவாய’ என்பதை உச்சரித்தால் கூடுதல் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.
மகா சிவாரத்தி பிப்.26 தேதி கொண்டாடப்பட உள்ளது.
சிவராத்திரி அன்று விரதம் இருந்தால் பல்வேறு நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.