ஏ.சி. பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது பல விதமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். அவை பற்றியும், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
அறைக்குள் நிலவும் வெப்பத்தை மட்டும் குறைப்பதில்லை. ஈரப்பதத்தையும் குறைத்துவிடும். குறிப்பாக சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும். சருமவறட்சி, சரும எரிச்சல், சருமம் உரிதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்
ஏ.சி. அறைக்குள் அதிக நேரம் செலவிடு பவர்கள் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக ஏ.சி.க்குள் இருக்காமல் அவ்வப்போது வெளியே நடமாட வேண்டும்
ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது நிலைமையை மோசமாக்கும். கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கக்கூடும்.
.சி.யை முறையாக பராமரிக்காவிட்டால் அதில் படர்ந்திருக் கும் தூசு, அழுக்குகள், பூஞ்சை காளான் உள்ளிட்டவை ஏ.சி. வெளியிடும் குளிர் காற்றில் கலந்து ஒவ்வாமை, சுவாச நோய்களுக்கு காரணியாகிவிடும்
ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட அறைக்குள் அதிக நேரம் இருந்தால், உடலில் வியர்வை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். இதனால் இயற்கை யாகவே உடலில் எண்ணெய் உற்பத்தியாகும் திறனும் பாதிப்படையும்.
இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஏ.சி. அறையில் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது நல்லது.
இடை யிடையே வேறு அறைக்கோ, வெளிப் புற சூழலுக்கோ இடம் மாறிக்கொள்வது சிறப்பானது.
உடலை ஹைட்ட்ரேட்டாக வைத்திருக்க தண்ணீர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகி வரலாம். ஏ.சி.யை முறையாக பராமரிப்பதும் முக்கியமானது.