மாட்டுப் பொங்கல் கொண்டாட காரணம் என்ன தெரியுமா?
தை 2வது நாளான மாட்டுப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
உயிர்வாழ்வதற்கான ஆதாரமான உணவை படைக்கும் விவசாயத்தையும், அதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனையும் வணங்குவதே பொங்கல் விழா.
விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக உள்ள மாடுகளுக்காக ( கால்நடைகள்) கொண்டாடப்படுவதே மாட்டுப்பொங்கல் ஆகும்
மாடுகளின் கொம்புகளுக்கு புதிய வர்ணம் தீட்டி அலங்கரித்து வைத்திருப்பார்கள்.
கால்களிலும், கழுத்துகளிலும் சலங்கைகளை கட்டி அழகு பார்ப்பதுடன், மாடுகளுக்கு இன்றைய தினத்தில் புதிய மூக்கணாங்கயிறு, தாம்பு கயிறு ஆகியவை அணிவிப்பார்கள்.
பல ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் காளை மாடுகளின் பெருமையை பறைசாற்றுகின்றன.