தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
அன்று சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக உழவர்கள் அறுவடை செய்த நெல்லை படைப்பார்கள்.
மக்கள் சர்க்கரை பொங்கலாக வைத்து சூரியனுக்கு படைத்தபின் அதை உண்டு மகிழ்வார்கள்.
சர்க்கரை பொங்கலை நல்ல நேரம் பார்த்து வைப்பது தான் ஐதீகம்.
அந்த நேரத்திற்குள் பொங்கல் வைத்து கடவுளுக்கு படைத்தால் நன்மை உண்டாகும் என்று கூறுவர்.
இந்த ஆண்டு பொங்கல் நாளில்(14/01/2025) காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம்.
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம் மற்றும் மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை இராகு காலம்.
அதனால் அந்த நேரங்களில் பொங்கல் வைக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.