பிப்ரவரி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான்.
இந்த தினம் எப்படி தோன்றியது என்பது பற்றிய குட்டி தொகுப்பு தான் இது.
கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் ரோமாபுரி நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டார்.
அந்நாட்டு பாதிரியார் வேலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதனையறிந்த மன்னன் வேலண்டைனை கைது செய்த்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
அறிவிப்பின்படி கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள் தலை துண்டிக்கப்பட்டு நிலையில் கொல்லப்பட்டார்.இந்த நாளை வேலண்டைன் தினமன காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
19-ஆம் நூற்றாண்டில், வேலண்டைன்ஸ் தினக் கார்டுகள், புக்கே, மற்றும் கிஃப்ட்கள் வழங்கும் கலாச்சாரம் உருவாகி, அமெரிக்காவில் இது மிகப்பெரிய வணிகவாய்ப்பாக மாறியது.
தற்போது வேலண்டைன்ஸ் டே உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்படுகின்றது, பல்வேறு நாடுகள் தங்கள் சொந்த கலாச்சாரத்துடன் அதனை இணைத்து கொண்டாடுகின்றன.
வேலண்டைனின்ஸ் நினைவாகவும், காதலை கொண்டாடுவதற்கான சிறப்பு நாளாகவும் பிப்ரவரி 14 காதலர் தினமாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஊடகங்கள் மூலம் வேலண்டைன்ஸ் டே மிகவும் பிரபலமடைந்து, காதலர்கள் தங்கள் சிறப்பு தருணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிய வழியாக மாறியுள்ளது.