டீன் ஏஜ் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டியவை!
டீன் ஏஜ் என்பது மிகவும் சவாலுக்குரிய பருவமாகும் .நாம் இதனை பருவ வயது என்கிறோம். குறிப்பாக 14 - 19 வயதுள்ள பையன் அல்லது பெண்ணின் மனநிலையை புரிந்துகொள்வது சற்று சவாலானதுதான்.
அவர்களுக்கு அதிக கோபம் வரலாம்..சின்ன விஷயத்திற்கு கூட ஆத்திரமும் எரிச்சலும் அடைவார்கள் . இதனை சில பெற்றோர்கள் புரிந்துக்கொள்ளாமல் அவர்களை குடும்பத்தினர் மத்தியில் உதாசீனப்படுத்துவது, தாழ்த்தி பேசுவது போன்றவற்றை செய்வார்கள் .
உங்களின் டீன் ஏஜ் பையனுக்கோ பெண்ணிற்கோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதுடன் உங்களிடம் இருந்து இடைவெளியையும் ஏற்படுத்திவிடும்
அடுத்த வீட்டு அல்லது எதிர்வீட்டு குழந்தைகளுடன் நமது குழந்தைகளை ஒப்பிட துவங்கிவிடுவோம். அதனை ஒரு போது செய்யாதீர்கள்.
மற்றர்களால் அவர்கள் ஏதேனும் தொந்தரவுகளை எதிர்க்கொள்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும் .
குழந்தைகள் மற்றவர்களால் துன்புறுத்தப்படும்போது சோகம், தனிமை, மனச்சோர்வு, பதட்டம் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்!
முடிந்த அளவு குழந்தைகளிடமோ அல்லது அவர்களின் முன்னிலையிலோ கெட்ட வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.
உங்கள் பிள்ளைகளுடன் உரையாடுகள். அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும். அவர்கள் பேசும்போது இடையூறு செய்யாமல் கேட்க வேண்டும். மரியாதையோடு நடத்த வேண்டும்.
அவர்களை Judge செய்யாமல் இருக்க வேண்டும். அவர்களுடன் எப்போதும் உடன் இருப்பீர்கள் என்பதை உறுதி செய்யவும்.