குழந்தைகளை அருங்காட்சியகத்துக்கு ஏன் அழைத்து செல்ல வேண்டும்?
அருங்காட்சியகங்கள், அறிவை விரிவுபடுத்துவதற்கான தகவல்கள் நிறைந்த மையங்களாகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு களுக்கு அருங்காட்சியகங்கள் அவர்கள் அறியாத உலகத்தை அறிமுகப்படுத்துகின்றன.
அருங்காட்சியகம் சிறந்த கல்வி அறிவை அளிக்கும். அருங்காட்சி யகத்திற்கு ஒருமுறை சென்றால், குழந்தைகளுக்கு பல்வேறு விஷயங்களைப் பற்றிய ஆழமான புரிதல் கிடைக்கும்.
நமக்கு முன்பு இருந்த, நிகழ்ந்த, வாழ்ந்த உலக அமைப்பு, சமுதாய வழக்கம், ஒவ்வொரு சிறு செயல்களுக்குப் பின்னணியில் உள்ள, அறிவியல் உண்மை ஆகியவற்றை நிஜத்தில் காண்பது புதிய அனுபத்தை தரும்.
இணையத்தில் கூறுவதையும், பார்ப்பதையும் அதிகமாக நம்பும் இந்த தலைமுறை குழந்தை களுக்கு, உண்மை அறியும் திறனை வளர்ப்பதற்கு அருங்காட்சியகம் உதவும்.
கலை மற்றும் கலாசார ஈடுபாட்டை அதிகரிக்கும் புதிய கனவுகளை உருவாக்கும். அவற்றை நனவாக்கு வதற்கான நம்பிக்கையைத் தரும். கலை உணர்வை மேம்படுத்தி, காட்சிப்படுத்தும் திறனையும், படைப் பாற்றலையும், கேள்வி ஞானத்தையும் உண்டாக்கும்.
பள்ளிக் கல்வியில் உள்ளதை விட அதிகப் படியான விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும்.ஏட்டுப் பாடத்தில் விரிவாக விவாதிக்கப்படாத வரலாற்று உண்மைகள், நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் உண்மை களை குழந்தைகள் தெரிந்துகொள்ள முடியும்.
அருங்காட்சியகங்கள் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கும்.அவற்றுக்கான பதிலைத் தாங்களே கண்டுபிடிக்கும் நம்பிக்கையை வழங்கும்.