கரு கரு தலைமுடி பெற சில டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

நல்லெண்ணெய், 4 லி தேங்காய் எண்ணெ யோடு கலந்து மிதமான தீயில் காய்ச்சி, வடி கட்டி தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருகருவென வளரும்.

மாதம் ஒரு முறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இரண் டையும் கலந்து இரவில் மென்மையாக தடவி மசாஜ் செய்துகொள் ளுங்கள். காலையில் சீயக்காய் தேய்த்துக் குளித் தால் கூந்தல் செழிப்பாக வளரும்.

மருதாணி பவுடர்; முட்டையின் வெள்ளைக் கரு, புளிக்காத தயிர் மூன் றையும் சேர்த்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் இளநரை கருப்பாகும்

தலைக்குக் குளித்த பிறகு ஈரம் நன்றாக காய்வதற்கு முன் எண்ணெய் தடவாமல் இருந்தாலே போதும். முடி செம்பட் டையாகாமலும், நரைக்காமலும் இருக்கும்.

நார்த்தங்காய் சாறு பிழிந்து தலையில் தேய்த்து சில நிமிடம், மட்டும் வைத்திருந்து, சோறு வடித்த கஞ்சியுடன் சீயக்காய் தூள் கலந்து தலையை அலசினால் அழுக்கு நீங்கி, கூந்தல் பளபளக்கும்.

கைப்பிடி வேப்பங் கொழுந்து, அதே அளவு குப்பை மேனி இலை, ஒரு மஞ்சள் துண்டு சேர்த்து தண்ணீர் தெளித்து மை போல அரைத்து, தலை முடியில் தடவி, நன்கு காய்ந்த பிறகு அலசி குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

கூந்தல் எண்ணெய் பசையுடன் படிந்திருக் கிறதா? எலுமிச்சைச் சாறு தடவி ஊறவைத்து, ஷாம்பு போட்டு குளித்தால் கூந்தல் புஸ்... புஸ்... என அழகாகும்.

தண்ணீரை கொதிக்கவைத்து, அந்த ஆவியில் கூந்தலை பாது காப்பாக காட்டினாலும், அல்லது கொதிக்கும் நீரில் சுத்தமான டவலை நனைத்து பிழிந்து, பத்து நிமிடம் தலையில் சுற்றிக் கொண்டு

ஷாம்பு போட்டு அலசி, காய விட் டாலும் போதும். கூந்தல் மென்மையாக பளபளப்பாகும்