இந்த ஒரு கலவை போதும் முகம் பளபளவென மாறும்!



தேவையான பொருட்கள் : சாதம், பால், உருளைக்கிழங்கு, எலுமிச்சை இதுவே போதுமானவை



முதலில் எலுமிச்சை நறுக்கி சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்



உருளைக்கிழங்கு தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்



பின்னர் உருளைகிழங்கை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்



சாதம் ,உருளைகிழங்கை மிக்ஸர் ஜாரில் போட்டு அரைத்து பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்



மிக்ஸியில் அரைத்த அந்த கலவையை ஆற வைக்க வேண்டும்



முகத்தில் தடவி 15-20 நிமிடம் உலர விட வேண்டும்



பிறகு நல்ல குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்



வாரத்தில் இரண்டு முறை செய்தால் பருக்கள் நீங்கலாம். பளபளப்பான சருமம் பெறலாம்