புகழை நாம் தேடி செல்லக்கூடாது; அதுதான் நம்மை தேடி வரவேண்டும்



விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு



நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்


பிறருக்கு தேவைப்படும் போது 'நல்லவர்களாக' தெரியும் நாம் தான்,
அவர்களது தேவைகள் முடிந்தவுடன் 'கெட்டவர்களாகி' விடுகின்றோம்



பொது வாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது


ஜாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள்
எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்



அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்; அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்; ஆள்பவர்கள் பெண்கள்


சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு;
அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை



ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்



தன்னை வென்றவன் தரணியை வெல்வான்