குழந்தைகள் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும்



தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும், பேன் குறைந்தபாடிருக்காது



தலையை சுத்தமாக வைத்துக்கொண்டாலே இந்தப் பேன், ஈறு பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்



குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்துக் குளிப்பாட்டவும்



கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருப்பதற்கு இதைச் செய்யலாம்



வேப்பிலை மற்றும் படிகாரம் இரண்டுமே ஆன்டி வைரல் தன்மை கொண்டவை



தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளைப் போக்குவதுடன், அவற்றை மறுபடி வரவிடாமல் காக்கும்



நல்லெண்ணெயைக் தடவி, 30 நிமிடங்கள் ஊறவிட்டு, பேன் சீப்பால் நன்கு வாரினால், பேன்கள் அனைத்தும் வந்துவிடும்



பின், வெற்றிலை பேஸ்ட்டை தடவி சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு தலையை அலசவும்



இப்படி செய்தால் பேன், ஈறு தொல்லை இருக்காது