புரோட்டின் பவுடர் ஆரோக்கியமானதா?
பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன
மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், கடந்த ஆண்டு வெளியிட்ட தனது அறிக்கையில் இளைய சமுதாயத்தினரால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படும் புரத பவுடர் ஆரோக்கியமற்றவை என்று எச்சரித்து உள்ளது.
அதிக புரோட்டீன் உட்கொள்ளல், குறிப்பாக குறைந்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளலுடன், கீட்டோசிஸுக்கு வழிவகுக்கும், இது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிகின்றனர்.
இதுதொடர்பான போதிய விழிப்புணர்வு இன்றியே இளைஞர்கள் பலரும் புரோட்டீன் பவுடர் மற்றும் ஸ்டிராய்டு ஊசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
புரோட்டின் பவுடரை நீண்ட காலம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, பயனாளிக்கு எலும்பு வலுவிழக்கிறது. சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
ரத்தத்தில் ஹார்மோன் சமநிலை சீர்குலைகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் வரக்கூடும். புரோட்டின் பவுடரில் உள்ள இன்சுலினை ஒத்த வளர்ச்சிக் காரணிகள் சில வகை புற்றுநோய்களோடு தொடர்புடையவை என்று தெரிவிக்கின்றனர்.
பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள், புரோட்டீன் பவுடர் பயன்படுத்தும்போது இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும்.
சில புரோட்டீன் பவுடர்களில் ஆபத்தான பூஞ்சைக் கொல்லிகள் ( fungal aflatoxins) மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருக்கலாம்.
அதிகப்படியான புரோட்டீன் பவுடர் பயன்பாடு மூளையை பாதிக்கும் அபாயத்தில் தள்ளும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.