கோடை வெயிலை சமாளிக்க உதவும் மேஜிக் ட்ரிங்!
கோடைக்காலத்தில் உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணமாகக் கூடிய பாக்டீரியாக்கள், மோரில் உள்ளன.
தயிர்,மோர் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும்.
தண்ணீருடன், தினமும் 1-2 டம்பளர் மோர் குடிப்பது கோடை வெயிலை சமாளிக்க உதவும்.
கோடையில் தயிரை விட, மோரே சிறந்தது. மோரில், புரோட்டீன் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
மோரில் வைட்டமின் பி உள்ளது. இதனால், உண்ட உணவு எளிதில் செரிமானம் ஆகும். அல்சருக்கு மிகவும் நல்லது. சர்க்கரையை விரைவில் சக்தியாக மாற்றி, மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
கெட்டி தயிரில் நிறைய தண்ணீர் கலந்து, கொஞ்சம் உப்பு, தேவையான அளவு இஞ்சி, புதினா, நெல்லிக்காய் சேர்த்து தயாரித்து அருந்தலாம். வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை மீட்க உதவுகிறது.
தினமும் மோர் அருந்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடையில் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
மோரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. வயிறு எரிச்சல் நோயால் பாதிக்கப்பட்டோர் மோர் குடிக்கலாம்.
தினமும் மோர் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது.