மொறுமொறுவென வறுத்தெடுக்கும் சேவு சிறந்த திண்பண்டமாக இருக்கும்.
மசாலா வடையை வைத்து சமைக்கும் இந்த குழம்பை இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
இங்கு கிடைக்கும் நெய் தழும்பும் மைசூர் பாக்கை வாயில் வைத்ததுமே நெய்யாகவே கரைந்துவிடும்.
குழம்பில் தேங்காய் சேர்த்து சமைத்தால் மணமும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். அதை துறுவி சாப்பாட்டில் சேர்த்து சமைத்து சாப்பிட்டல், குழந்தை பருவத்தில் அம்மா சமைத்து தரும் தேங்காய் சாதம் நினைவுக்கு வந்துவிடும்.
சர்க்கரை பாகில் ஊறிக்கொண்டிருக்கும் ’குண்டு குண்டு’ குலோப் ஜாமுனை அப்படியே எடுத்து சாப்பிட்டால் நாவிலிருந்து வயிற்றுக்குள் வழுக்கிக்கொண்டு போகும்.
கேரளாவிற்கு அடுத்து கிருஷ்ணகிரி புட்டிற்கு தான் ரசிகர்கள் அதிகம்.
முதன்முதலில் கிருஷ்ணப்ப ஐயர் என்பவர் தான் குடிசைத்தொழிலாக மணப்பாறையில் முறுக்கு செய்யத் தொடங்கினார்.
அடையையும் அவியலையும் சேர்த்து சாப்பிடும்போது ஒரு தனி சுகம் தான். அடையுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடாலும் சுவையாகத்தான் இருக்கும்.
திண்டுக்கல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது தலப்பாக்கட்டி பிரியாணி தான்.
ஊட்டச்சத்து நிறைந்த பருத்திப்பால் பாரம்பரிய உணவாகவும் சிறந்த வீட்டு வைத்திய உணவாகவும் இருக்கிறது.