பனீர் கிரேவி இப்படி செய்து அசத்துங்க!

Published by: ஜான்சி ராணி

என்னென்ன தேவை?, பனீர் -250 கி. ,மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், சீரக தூள் - 1/2 தூள், மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஊற வைத்த முந்திரி - ஒரு கப், உப்பு தேவையான அளவு , தயிர் - ஒரு கப், பேப்ரிக்கா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3, கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - 1 டீ ஸ்பூன், மேத்தி இலைகள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி இலை - தேவையான அளவு

பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பனீர், உப்பு, மல்லித் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

20 நிமிடங்கள் ஊற வைக்கவும். முந்திரியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

இப்போது தயிர் மசாலா தயாரிக்க வேண்டும். புளிக்காத, கெட்டியான தயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதோடு பேப்ரிக்கா,

மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு,மிளகு தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து ஊறவைத்த பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

2 நிமிடங்கள் கழித்து தயிர் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். முந்திரியை நன்றான விழுதாக அரைத்து சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் பனீர் க்ரேவி தயார்.