சோஷியல் மீடியாவில் வெறுப்பு கருத்து - த்ரிஷா சொன்னது என்ன?

அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. இது அஜித் குமார் படமாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா தேவையில்லை, ஏன் நடிக்க வேண்டும்? ஏன் புரமோஷன் செய்யவில்லை? என இப்படி தொடர்ச்சியாக விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகை த்ரிஷா தன் மீதான அவதூறுகளுக்காக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியான இடத்தை தக்கவைத்துள்ளார்.

41 வயதிலும் த்ரிஷா தமிழில் முதன்மையான நடிகையாக இருக்கிறார். த்ரிஷாவின் நடிப்பும் அவரது நடிப்பும் அப்படியே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசத்துடன் திட்டியிருக்கிறார்.

தனது இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா” ஷப்பா.... டாக்சிக்கான மக்களே எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்? நிம்மதியாக தூங்குகிறீர்கள்? சமூக வலைதளத்தில் இருந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி மோசமான கருத்துகளை தெரிவிப்பதுதான் உங்களது அன்றைய நாளை நன்றாக்குகிறதா?

உங்களுடனும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நினைத்தால் மிகவும் வேதனையளிக்கிறது. பெயரில்லாத, அடையாளமில்லா நீங்கள் நிச்சயமாக கோழைகளே! உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கட்டும்! எனக் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளுக்கு த்ரிஷா இப்படி தெரிவித்துள்ளார்.