இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின் உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராக சமுத்திரக்கனி அறிமுகமானார்.
பின் அவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் அவருக்கு பெறும் வெற்றியாக அமைந்தது.
அதன்பின் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் களமிறங்கினார் சமுத்திரக்கனி.
தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரு சிறந்த நடிகராக உள்ளார்.
படங்கள் மட்டுமில்லாமல் சமுத்திரக்கனி சீரியல்களையும் இயக்கியுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், அண்ணி, சகானா, செல்வி, அரசி, அலைபாயுதே, தேன்மொழி போன்ற சீரியல்களை இயக்கியுள்ளதாக கூறினார்.
மேலும், ரம்யா கிருஷ்ணனின் தங்க வேட்டை நிகழ்ச்சியை இயக்கியதும் அவர் தான் என்று கூறியுள்ளார்.