அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.
இவர், யதார்த்தமான மற்றும் தனித்துவமான திரைப்படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர்.
கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர் போன்ற படைப்புகளின் மூலம், பாலிவுட்டில் தனி முத்திரை பதித்தவர் அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப், பாலிவுட் துறையை விட்டு தென்னிந்தியாவில் தனது சினிமா பயணத்தை தொடங்க முடிவெடுத்து உள்ளார்
பாக்ஸ் ஆபிஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், பாலிவுட்டில் படைப்பாற்றல் குறைந்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்
பாலிவுட் துறையின் மனநிலை தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக அனுராக் காஷ்யப் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் அதிக படைப்பாற்றல் சுதந்திரம் இருப்பதாக அனுராக் காஷ்யப் நம்புகிறார். அதனால் அங்கு செல்ல முடிவு செய்தார்
மலையாளம்-இந்தி மற்றும் தமிழ் திரைப்படம் உட்பட, தென்னிந்தியாவில் புதிய படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்
இவர் மகாராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் கவனத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது