27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக சார்பில் முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு
ரேகா குப்தா டெல்லி பல்கலைகழகத்தில் தனது பட்ட படிப்பை முடித்தார்.
1996- 97 , இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவராக இருந்தார்
மாணவ அணி தலைவராக பல மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்
பின் மாநகராட்சி அரசியலில் தனது கால்களை பதித்தார்
2007 இல் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்
சமேத யோஜனா தொடங்கியது முதல், பெண்களுக்கான முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.
பஜாக வில் சேர்ந்து, முதலில் டெல்லி மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்த இவர், தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.
கவனத்தை ஈர்க்கும் வகையில் 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில், 29,595 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக தற்போது பதவி ஏற்றுள்ளார்.