இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது
தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்றது
17 ஆண்டுகள் கழித்து ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது
கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
இது தொடர்பாக பேசியவர் இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை என கூறினார்
அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது என உரையை முடித்தார்
அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இல்லை நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினோம் என்றார்
ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறினார் ரோகித் ஷர்மா
Thanks for Reading.
UP NEXT
7 ரன்களில் திரில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
View next story