2025-26 ஆண்டிற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தொகையை அரசு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பு பிஎஃப் பெறுபவர்களை பெரும் ஏமாற்றத்திற்கு கொண்டு சென்றது.
பிஎஃப் பெறுபவர்களுக்கான அமைப்பு நீண்ட காலமாக ஓய்வூதியத்தொகைய ரூ.7500-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மத்திய அரசு UPS திட்டத்தை அங்கீகரித்ததிலிருந்து, ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை சூடு பிடிக்கத் தொடங்கியது.
தற்போது ரூ.1000-ஆக உள்ள குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தொகையை ரூ.7500-ஆக உயர்த்தினால் மிகப்பெறிய நிவாரணமாக இருக்கும் என ஊழியர்கள் கருதுகின்றனர்.
சுமார் 78 லட்சம் ஊழியர்கள் EPS இன் கீழ் மாத ஓய்வூதியம் பெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.1000-ஆக அதிகரிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அதற்கு பிறகு அதிகரிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்று பிஎஃப் ஊழியர்கள் நம்புகின்றனர்.