வெண்டைக்காயில் நிறைய சத்துக்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்



ஆனால் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?



வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வேலை செய்யும் என்று சொல்லி அனைவரும் கேட்டிருப்போம்



வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரிலும் எக்கச்சக்க சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது



இரவு தூங்க செல்லும் முன் வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிளாஸ் தண்ணீரில் போட வேண்டும்



அந்த நீரை காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது



இவ்வாறு அருந்துவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது



நார்ச்சத்து நிறைந்த இந்த நீரை குடிப்பதால் உடல் குளிர்ச்சி பெறும் என்றும் கூறப்படுகிறது



இந்த தண்ணீர் எலும்பை வலுப்படுத்தவும் உதவுகிறது



இவ்வாறு இந்த வெண்டைக்காய் நீரை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலு பெறலாம்