பைக் ஓட்டுவதற்கு பயம் இருக்கா? சில டிப்ஸ்!
ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் பொல்லது, கல்லூரி மற்றும் அலுவலகத்துக்கு செல்வது என பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுபவை இருசக்கர வாகனங்கள்.
அதில் ஏறி உட்கார்ந்ததும் சிட்டாக பறக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேநேரம். பல பெண்கள் சற்று பயந்த நிலையிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் பார்க்க முடிகிறது.
பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிவந்தாலும் இந்த பய உணர்வு அவர்களுக்கு தொடர்கதையாகவே இருக்கும்.உளவியல் ரீதியான இந்த பிரச்சினைக்கு 'மோட்டார் போபியா' என்று பெயர்
'மோட்டார்போபியா' உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாதையையே போக்குவரத்துக்காக பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்..
தனக்கு அல்லது தான் அதிகமாக நேசித்தவருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம், இறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட மனஉளைச்சல், எதிர்மறையான தகவல்களை அதிகமாக கேட்டறிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 'மோட்டார்போபியா' ஏற்படலாம்.
இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போதும், மற்றவருடன் வாகனத்தில் சவாரி செய்யும் போதும், பதற்றம் மற்றும் பய உணர்வு அதிகரிக்கும்.
வாகனம் ஓட்டும்போது முழு கவனமும் பயணத்தில் இருப்பதை உறுதி செய்யவும்.
பயத்தை கைடுவிதல் முயற்சிகளால் சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தொடர்ந்து பைக் ஓட்டிவந்தால் பயன் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.