தேசிய போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை வீராங்கனை தங்கம் வென்று சாதனை

தேசிய போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்று சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Continues below advertisement

கோவாவில் நடைபெற்ற 37 -வது தேசிய விளையாட்டுப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட போல் வால்ட் வீராங்கனை பரணிகா தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உயரிய போட்டியான தேசிய விளையாட்டுப் போட்டியின் 37 -வது போட்டி கோவாவில் உள்ள பேம்புலிம் ஸ்டேடியத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் விண்ணப்பித்து, அதில் இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் மூலமாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் 26 வயதான பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Continues below advertisement


அவர் 3.90 மீட்டர் உயரம் தாண்டி இந்த வெற்றியை பெற்றார். இவர் ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். வெற்றி பெற்ற பரணிகாவுக்கு பயிற்சியாளர் மில்பர், ரயில்வே துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். பரணிகா ஏற்கெனவே தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61 -வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( இன்டர் - ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022 ) ஜூன் 10 -ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போல் வால்ட் எனப்படும், கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில், 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார். 

Madras High Court: நீட் தேர்வை எதிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..


தற்போது மீண்டும் தங்கம் பதக்கம் வென்று சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு பெற்றோர் மற்றும் கிராமமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குத்தாலம் பழையகூடலூர் ஜி.எஸ்.கே.மெட்ரிக் பள்ளியில் படித்தபோதே  ஓட்டப்பந்தயம், தூரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பரணிகா பெற்றுள்ளார். பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் எம்.காம் பயின்றுகொண்டே போல்வால்ட் கோச் மில்பர் என்பவரிடம் பயிற்சி பெற்ற பரணிகா தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது விளையாட்டுத்துறையில் படைத்த சாதனைகள் காரணமாக ரயில்வே துறையில் சென்னையில் எழுத்தர் பணி கிடைத்து அங்கு பணியாற்றி வருகிறார்.

Kodo Millet Upma : சத்தான சுவையான வரகரிசி உப்புமா.. எவ்வளவு நல்லது தெரியுமா? எப்படி செய்வதென்று பார்க்கலாம்...


ஆசிய அளவில் நடைபெறவுள்ள  போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தன்னுடைய ஆசை என்றும், அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு உள்ளதாகவும் கூறும் பரணிகா, சென்னையில் ஜூன் 10 -இல் நடைபெற்ற போல் வால்ட் போட்டியில் போட்டிக்கு பயன்படுத்திய போல் பிளக்ஸிபிளிட்டி குறைந்த காரணத்தால், 4.05 மீட்டர் தூரத்தைவிட அதிக உயரம் தாண்ட முடியாமல் போனதாகவும், தங்களைப் போன்றோருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் உதவி செய்தால் இன்னும் மேன்மேலும் பல சாதனைகளை படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rathna kumar: 'லியோ’ விழாவில் சர்ச்சை பேச்சு.. வச்சு செய்த நெட்டிசன்கள்.. சோசியல் மீடியாவுக்கு டாட்டா காட்டிய ரத்னகுமார்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola