அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழாவும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.


தேனி வழியாக சபரிமலைக்கு போறீங்களா? - கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க! பாதைகள் மாற்றம்


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்ய கூடிய நிகழ்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நேற்று மாலை நடைபெற்றது.  மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கி கொண்டு நவ வீரர்கள் முன்னே அணிவகுத்து வர மலையடிவாரத்திற்கு வந்து சூரபத்மன்களை வதம் செய்தார்.




முதலில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரனையும், அடுத்ததாக கிழக்கு வீதியில் பானுகோபன் சூரனையும் சின்னகுமரர் வதம் செய்வார். பின்னர் தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும் இறுதியாக மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.



சூரனை வதம் செய்யக்கூடிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி விமர்சியாக திருவிழாவானது நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சஷ்டி விரதத்தில் 6 நாட்கள் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வாழை தண்டு, பழங்கள் வைத்து தீபம் ஏற்றி முருகன் பாடல்கள் பாடியும் சஷ்டி விரதத்தை நிறைவேற்றினர்.


IND vs AUS Final 2023: களமிறங்கிய 6 ஆயிரம் போலீஸ்.. திருப்பி விடப்படும் போக்குவரத்து.. பலத்த பாதுகாப்பில் நரேந்திர மோடி ஸ்டேடியம்!




IND vs AUS Final 2023: “உலகக்கோப்பை இறுதிப்போட்டியை உடனே நிறுத்தணும்” - காலிஸ்தான் ஆதரவாளர் மிரட்டல்


கந்த சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் இன்று வாழைத்தண்டு படையுடன் தங்களது விரதத்தை நிறைவேற்றினர். இதற்காக திரு ஆவினன்குடி வளாகத்தில் வாழைத்தண்டு பழங்களுடன் கூடிய படையல் இட்டு, தீபங்கள் ஏற்றியும், முருகன் துதி பாடல்கள் பாடியும், முருகனுக்கு படைத்து தங்களது விரதத்தை பக்தர்கள் நிறைவேற்றினர். மேலும் கந்த சஷ்டி விழாவில் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்வதற்காக காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர். படிப்பாதை வழியாக பக்தர்கள் மலை மீது சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.