திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் பிரதானமாக விளங்கும் மலைக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Siraj No.1 ODI bowler: மிரட்டல் பவுலிங்கிற்கு கிடைத்த பரிசு.. நம்பர் ஒன் பவுலர் மகுடத்தை சூடிய முகமது சிராஜ்...!


பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகமானது வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பழனி கோவில் மூலவரான நவபாஷாண முருகனுக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 23ம்தேதி மாலை முதல்கால யாக பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக யாகவேள்வி நிகழ்ச்சியில் நேற்று மாலை வரை மூன்று கால யாக பூஜைகள் நிறைவடைந்தது. 


Noro Virus : 19 மாணவர்கள் நோரோ வைரஸால் பாதிப்பு… மீண்டும் பரவுகிறதா கொடிய வைரஸ்! எப்படி பாதுகாப்பது? அறிகுறிகள் என்னென்ன?


இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நான்காம் காலையாக வேள்விகள் துவங்கியது. வருகிற 27ம்தேதி அதிகாலையுடன் 8கால யாகபூஜைகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  தொடர்ந்து வரும்  26ம்தேதி மலைக்கோவில் மூலவர் ராஜகோபுரம் தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவிலுக்கு 26ம் தேதியான நாளை  காலை 9.50 முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.


Bank Holidays : நாளை முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. ஏன் தெரியுமா ? முழுவிவரம் உள்ளே!


இதையடுத்து 27ம் தேதி நாளை மறுநாள் காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.




கும்பாபிஷேகத்தை ஒட்டி  தங்கரதம் புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது‌. கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற 27ம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தன்று காலை 9:30 மணி வரை குறிப்பிட்ட அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும்  மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை சாமிதரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




Sri Sri Ravi Shankar: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரையிறக்கம்... நடந்தது என்ன..?


மேலும் பக்தர்கள் வசதிக்காக பழனி அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கத்தில்  நாள்முழுவதும் வருகிற 27ம்தேதி வரை அன்னதானம் நடைபெற  துவங்கப்பட்டுள்ளது‌.  அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண