தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கோயில்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சூரியனார் கோயில் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


மீனவ கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமத்தில் பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ காளியம்மன் கோயில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில், ஸ்ரீ பிடாரியம்மன் கோயில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில் ஆகிய 5 கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோயில்களை கும்பாபிஷேகம் செய்வதற்காக ஊர்மக்கள் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகளை மேற்கொண்டு, கோயில்களின் பழமை மாறாமல் கட்டி முடிக்கப்பட்டது. 


TNEA Admission 2024: இன்னும் சில நாட்கள்தான்; பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி?




யாகசாலை பூஜை 


அதனைத் தொடர்ந்து கோயிலில் முன்பு யாகசாலைகள் அமைத்து, புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கினர். தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகாபூர்ணஹூதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று முதலில் பன்னீர் குளக்கரை வரசித்தி விநாயகர் கோயிலில் கடங்கள் சென்று கோயிலை வலம் வந்து, கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


2 Years of Vikram: லோகேஷின் சம்பவத்துக்கு வயது ரெண்டு... ஃபகத்தும், கமலும் இணைந்து மிரட்டிய விக்ரம்..




சூரியனார் கோயில் ஆதீனம் பங்கேற்பு 


பின்னர் காளியம்மன் கோயில், ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில், ஸ்ரீ பிடாரியம்மன் கோயில், ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் மற்றும் சப்த கன்னிகள் கோயில், ஆகிய கோயில்களின் விமான கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சூரியனார் கோயில் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.


Sasikumar: “இனிமேல் சூரி ஹீரோ தான்.. அவர் வளர்ச்சியை பார்த்து மகிழ்கிறேன்” - நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சி!