திண்டுக்கல்லில் மத நல்லிணக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். இஸ்லாமியர்கள் பங்கேற்று சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர்.


திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் ஸ்ரீ சக்தி சந்தான கணேசர் திருக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் வருட அபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ சக்தி சந்தான கணேசன் மற்றும் பரிவார தெய்வங்களாக ஸ்ரீ பரமேஸ்வரி சமேத பரமேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத் பவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் காலபைரவர் ஆகிய தெய்வங்கள் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா நடந்தது.


Youtuber Irfan: பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு.. யூட்யூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!




இதில் இஸ்லாமிய பெருமக்கள், மணமகள் வீட்டாராக பங்கேற்று சீர்வரிசைகளை அளித்தனர். பூமாலை, வளையல், பட்டுச்சேலை பழங்கள் உட்பட 21 வகை சீர் பட்டு கொண்ட சீர்வரிசையை அளித்தனர். விழா ஏற்பாடுகளை J.C.அறக்கட்டளை தலைவர் தனபால் தலைமையில் ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ரவுண்ட் ரோடு புதூர் ஜூம்மா மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில், செயலாளர் முகமது ரஃபீக், பொருளாளர் முகமது ஹவுஸ், 18 வதுவார்டு மாநகராட்சி கவுன்சிலர் முகமது சித்திக்,  உட்பட பலர் பங்கேற்றனர். சிவாச்சாரியார்களால் மங்கள  நான் பூட்டப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது தாலி கயிறுகளை மாற்றிக் கொண்டனர். அதனை தொடர்ந்து திருக்கல்யாண விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது


நத்தம்-கோவில்பட்டியில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் திருத்தேரோட்டம்.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டியில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த கோவிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோவில்பட்டி பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Rajiv Gandhi Death Anniversary: 33வது நினைவு தினம்..! அப்பா ராஜிவ் காந்தி குறித்து ராகுல் நெகிழ்ச்சி




திருவிழாவின் நேற்று திங்கட்கிழமை கைலாசநாதர் - சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலையில் 10.00 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, சிவாச்சாரியர்களின் மந்திரங்கள் முழங்க தொடங்கியது. இதில் திருத்தேர் வர்ணபூமாலைகளாலும், வண்ண துணிகளாலும் அலங்கரிங்கபட்டு இருந்தது. இந்த தேரில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி கோவில்பட்டி, அக்ரஹாரம் வழியாக நகர்வலமாக கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடங்களை பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.