திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் கார்த்திகை மாதத்தின் சோம வாரத்தில் கலசம் மற்றும் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத சோம வார நாளையொட்டி நேற்று கலச பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணி அளவில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, சுவாமி பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு கலசம் மற்றும் 108 சங்கு சிவ யாகம் நடைபெற்றது.


இன்று கார்த்திகை தீபம் ..... பெருமுக்கல் சஞ்சீவி மலை உச்சியில் 1008 லிட்டர் நெய் தீபம்: வரலாறு இதுதான்!


அதைத்தொடர்ந்து மாலையில் பிரதோஷ வழிபாடுகள் நடந்தன. இதில் மூலவர் சுவாமிகள், நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு சிவபெருமானுக்கு பஞ்சமுக அர்ச்சனை, மகா அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் வெள்ளி இட வாகனத்தில் கோயில் உட்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வருதல் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.


"கட்டாய மதமாற்றம் ஒரு சீரியசான விஷயம்... அரசியலமைப்புக்கு எதிரானது" - உச்ச நீதின்றம் அதிரடி கருத்து..!




Ambedkar Death Anniversary: 'ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்' - அம்பேத்கரின் நினைவுநாளில் தலைவர்கள் மரியாதை


இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் திண்டுக்கல் ரெயிலடி சித்தி விநாயகர் கோயில், காந்திஜி புதுரோடு ஆதி சிவன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி சிவபுரம் அழகாம்பிகை உடனுறை சிவகுருசாமி கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் பட்டிவீரன்பட்டியில் உள்ள ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. அப்போது 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றி சிவ வஜ்ரவேல் வடிவில் அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. அதன்பிறகு ஜோதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண