மத்தாப்புடன் குடிபோதையில் நடனம்... திருமண விழாவை தீக்கிரையாக்கவிருந்த நபர்!

திருமண விழா நடைபெறும் இடத்தை தீப்பற்ற விட்டு நடனமாடிய ’குடி’மகனின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Continues below advertisement

திருமண விழா நடைபெறும் இடத்தை தீப்பற்ற விட்டு நடனமாடிய ’குடி’மகனின் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Continues below advertisement

திருமண விழாவில் கலந்துகொள்ள வந்து நபர் ஒருவர் விழா நடைபெறும் இடத்தையே தீக்கிரையாக்கவிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த வீடியோவில், திருமண விழா ஒன்றுக்கு வந்திருந்த நபர், விழாவில் குடித்து விட்டு கைகளில் மத்தாப்புடன் நடனமாடியபடி வருகிறார்.

குடித்துவிட்டு கோக்குமாக்காக நடனமாடியதால் கையிலிருந்த மத்தாப்பு அருகிலிருக்கும் பொருள்களில் பற்றி சடாரென தீப்பிடித்து உறவினர்கள் அலறி ஓடுகின்றனர்.

 

ஆரம்பத்திலேயே அனைவரும் தீப்பற்றியதைப் பார்த்துவிட்டதால் உடனடியாக செயல்பட்டு தீயை அனைவரும் அணைக்க, அந்த நபர் மட்டும் தொடர்ந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டே ஆடிக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ 13 மில்லியன் பார்வையாளர்களையும் 50 ஆயிரம் ரீட்வீட்டுகளையும் பெற்று ட்விட்டரில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.


 
 
 
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola