விழுப்புரம் : விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரத்தில்  நெல் அறுவடையின் பொழுது அறுவடை இயந்திரத்தின் பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு பத்து லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் கருகி சேதமாகின. இதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


விழுப்புரம் அருகேயுள்ள மரகதபுரம் கிராமத்தைச் சேர்ந்த  விவசாயி சுகுமார் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நெல் வயலில் நெற்கதிர்கள் பயிரிடப்பட்டு இன்று அறுவடை செய்வதற்காக அதே கிராமத்தைச்  ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் சுகுமார் வயலில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென நெல் அறுவடை இயந்திரத்தின்  பேட்டரி இருக்கும் பகுதியில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து நெல் அறுவடை இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு  ஓட்டுநர் அங்கிருந்து கீழே இறங்கி அதிர்ஷ்டமாக உயிர் தப்பினார்.


பின்னர் இயந்திரம்  எரிவதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் நெல் வயலில் மேலும் தீ பரவாமல் இருக்க நெற்பயிர்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தினர். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலான நெற்கதிர்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. பின்னர் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது தீயனைப்பு வீரர்கள் தாமதமாக வந்ததால்  நெல் அறுவடை இயந்திரத்தின் இன்ஜின் முழுவதும் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்தில் பத்து லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் தீயில் கருகி சேதமாகின.




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.