மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முன்னாள் ஆட்சியர் லலிதா அனுப்பி உள்ள உத்தரவு கடிதத்தில் 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(1அ) மற்றும் 205(11) இன் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம்,




ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது தொடர்பாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவரால் அளிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து, ஆணைக்காரன் சத்திரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 


IND VS AUS 1ST TEST: பறந்தது ஸ்டெம்ப்; சதம் விளாசிய ரோகித் போல்ட் - ஆஸி. பவுலர்கள் நிம்மதி பெருமூச்சு..!




இந்த அறிக்கை 1994 -ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 262 (1)ன் படி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து  அரசு இதழில் வெளியானதை அடுத்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் பதவி நீக்க ஆணையை கனகராஜிடம் நேரில் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கினார். மக்களால் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டு பதவி நீக்கம் ஆன சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Maha Shivaratri Fasting: மகா சிவராத்திரி மகிமைகள்; வழிபாடுகளும், சிவ பூஜையின் முறைகளும் எப்படி செய்வது?