மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவர்கள் இல்லை - உடல்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அவலம்

அழுகிய நிலையில் வரும் சடலத்தை மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு மருத்துவர்கள் இல்லாததால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 4-ம் நம்பர் புது தெருவில் மேட்டு தெருகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் குளத்தில் கிடந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வகையில், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

Continues below advertisement


இறந்து கிடந்தவர் பச்சை கலரில் கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார், மேலும் அவர் யார் என்று அடையாளம் காண முடியாததால் இரண்டு மூன்று தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையிலும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட வேலைக்கு வந்தவர்கள் யாராவது காணாமல் போய் உள்ளனரா, வழிப்போக்கர்கள் ஆக வந்தவர்கள் யாராவது தவறி விழுந்து விட்டனரா என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Pushpa 2 Fahadh Faasil: புஷ்பாவை பழிவாங்க வருகிறார் ஃபஹத் ஃபாசில்... இயக்குநருடன் மிரட்டலான ஃபோட்டோ!


மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட  மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அழுகிய நிலையில் உள்ள சடலங்களை பிரேதபரிசோதனை செய்வதற்கு மருத்துவர்கள் (ஸ்பெசலிஸ்ட்) இல்லாததால், உடல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Illicit Liquor: தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை - 6 பேர் கைது, 60 லிட்டர் ஊரல் அழிப்பு


இதனால் கூடுதல் பணி சுமை ஏற்பட்டு காவல்துறையினர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் அரசு கவனம் செலுத்தி மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனையில் அழுகிய நிலையில் உள்ள சடலங்களையும் உடற்கூறு ஆய்வு செய்வதற்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது தான் குற்ற வழக்குகளில் காவல்துறையினர் முறையாகவும், விரைவாகவும் விசாரணை செய்ய  முடியும் எனவும் கூறுகின்றனர்.

The Kerala Story : தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் தடை செய்யக்கூடாது.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement