தமிழ்நாடில் இனி வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மட்டும் தமிழ்நாட்டில் மழை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.


12.04.2023 முதல் 15.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


செங்கோட்டை (தென்காசி), சூளகிரி (கிருஷ்ணகிரி), சின்னாறு அணை (கிருஷ்ணகிரி), குண்டாறு அணை (தென்காசி) தலா 2, ராஜபாளையம் (விருதுநகர்), மஞ்சளாறு (தேனி), சோத்துப்பாறை (தேனி), ஆயிக்குடி (தென்காசி), கொடைக்கானல் (திண்டுக்கல்), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மழையின் அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒரு வாரமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து கரூர் பரமத்தியில் – 38.5 டிகிரி செல்சியஸ், சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸ், வேலூர், திருத்தணி, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகிட்யுள்ளது. சென்னையில் இயல்பை விட குறைவான அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என கூறப்பட்ட நிலையில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


இனி வரும் நாட்களின் வறண்ட வனிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் எனா அறிவுறுத்தப்பட்டுள்ளது.


TN Assembly: கொரோனா அதிகரித்தால் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..


Coal Mining Issue: ரத்தான நிலக்கரி சுரங்க விவகாரம்.. முதல்வரிடம் ஒன்று கூடி நன்றி தெரிவித்த விவசாயிகள்..!


Minister Kayalvizhi Selvaraj: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி.. விவரம் உள்ளே..!