TN Headlines Today: அக்டோபர் 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்.. 9 மாவட்டங்களில் கனமழை... முக்கிய செய்திகள் இதோ!

TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

Continues below advertisement
  • TN Assembly: அக்டோபர் 9ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை  கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், கூட்டத்தொடர் எப்போதுவரை நடைபெறும் என்பது குறித்து சட்டமன்ற அலுவல் குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023- 2024ஆம் நிதியாண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க 

Continues below advertisement

  • TN Rain Alert: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
20.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி,  கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க 
 
  • CM MK Stalin: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: "வரவேற்கிறோம்.. தமிழ்நாட்டை வஞ்சிக்கமாட்டோம் என உறுதி தருக” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.க., மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது!" என்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக பாராமுகம் காட்டிவிட்டு தற்போது சட்டமியற்றுவது தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் பா.ஜ.க. மீது விமர்சனம் வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் படிக்க 

  • IT Raid: சென்னையில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை.. வருமானவரித்துறை அதிரடி..

சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் (CREW)  அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கொண்ட திட்டங்களை  கையாண்டு வருகிறது. 35 ஆண்டுகளில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒரிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்திற்கு  கிளைகள் உள்ளன. மேலும் படிக்க 

  • Minister Udhayanidhi Stalin : சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடுமா? : நம்புங்கள்.. ஒழிந்துவிடும்.. பதிலளித்த அமைச்சர் உதயநிதி
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை. -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, அதை கொண்டு வருவது போல் தெரியவில்லை. புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும் படிக்க 

 


 

 

Continues below advertisement