• IPS Transfer: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. அண்ணாமலை போராட்டம்.. காத்திருப்போர் பட்டியலில் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள்..




சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்கக்கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார். மேலும் படிக்க 



  • TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.. வானிலை நிலவரம் இதோ..


மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  12.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க



  • Senthil Balaji: மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறையினர்..


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் படிக்க 



  • Pongal Ticket Booking: மக்களே தயாராகுங்க.. பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்..!


பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தாலே வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊரில் சென்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பண்டிகையை கொண்டாட வேண்டுமென நினைப்பார்கள். அப்படியான சமயத்தில் பெரும்பாலும் மக்கள் விரும்புவது ரயில் பயணங்களை தான். பேருந்து, விமானம் போன்ற மற்ற போக்குவரத்து சாதனங்கள் இருந்தாலும் ரயிலில் கட்டணம் குறைவு, கூட்ட நெரிசலை தவிர்க்கலாம், சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணம் என்பதால் எப்போதும் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். மேலும் படிக்க 



  • Dengue Review Meeting: தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவுடன் இன்று ஆலோசனை கூட்டம்..


மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பருவகால மழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரிலிருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியிலும் இந்த பிரச்சனை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்‌ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார துறை தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க