Border parotta: பார்டர் பரோட்டா கடைக்கு சீல்...உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... என்ன ஆச்சு?
உணவு பொருட்களில் கலப்படம் செய்வதாக வந்த புகாரையடுத்து, பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம் பிரானூரில் பார்டர் பரோட்டா கடை என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகமானது பரோட்டா உணவுக்கு மிகவும் பிரபலம் என்று கூறப்படுகிறது.
தென்காசி வழியாக செல்ல கூடியவர்கள், பலரும் இந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு செல்வர். மேலும் குற்றாலம் நீர்வீழ்ச்சி செல்வோரும், இந்த உணவகத்திற்கு சென்று பரோட்டாவை ருசித்து விட்டு வருவர்.
Just In




கடைக்கு சீல்:
இந்நிலையில், இந்த உணவகத்தில், கலப்படம் மற்றும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை கொண்டு சமைப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. அதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடைக்கு சென்று சோதனை செய்தனர்.
புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பார்டர் பரோட்டா கடை குடோனில் சோதனை நடத்த சென்றனர்.
ஆனால் குடோனை சோதனை நடத்த, கடை உரிமையாளர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதையடுத்து, தென்காசி பிரானூரில் பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.