ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.


டெல்லி புறப்பட்ட ஸ்டாலின்


ஜி-20 மாநாட்டை, இந்த ஆண்டு தலைமையேற்று நடத்துவதற்கான பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள 40க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்கின்றனர்.


தனி விமானம்:


ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார். தொடர்ந்து இன்று இரவே அவர் மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது குறித்து பேச வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் டெல்லி வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் தலைவர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


ஜி- நாடுகள்:


ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.


இந்தாண்டில், இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜி-20 மாநாட்டை சிறப்பாக நடத்தும் பொருட்டும், மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளன.




மேலும் படிக்க


Gujarat Election 2022: மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த பிரதமர் மோடி...! சூடு பிடிக்கும் குஜராத் தேர்தல்..!


Gujarat Election: "குஜராத் தேர்தலை திருவிழா போல கொண்டாடும் மக்கள்.." பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேட்டி..!