Pongal Parisu Thoguppu 2025: இந்த பொங்கலுக்கு எத்தனை குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு தெரியுமா...?

Pongal Parisu in Ration Shop 2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 357 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பதனிருப்பு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு செய்தார்.

Continues below advertisement

பொங்கல் பரிசுத்தொகுப்பு

தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை மக்கள் சிறப்பாக கொண்டாடிட ஏதுவாக கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு வழங்குவதாக அறிவித்து ஆணையிட்டுள்ளது. 

AI Chatbots: AI சாட்போட்ஸ்..! சொல்லக்கூடாத, கேட்கக்கூடாத விஷயங்கள் - தவறினால் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து..!


மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,83,357 பரிசுத்தொகுப்பு

அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,357 குடும்ப அட்டை தாரர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 435 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பினை எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

Bharat Mobility Global Expo 2025: 6 நாட்கள், 14 நிறுவனங்கள், பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ, எங்கு? எப்போது? முன்பதிவு எப்படி?


13-ம் தேதி துவக்கம்

நியாயவிலைக்கடைகளில் அதிக கூட்டம் சேராமல் இருக்க ஜனவரி 7- ஆம் தேதி முதல் 9 - ஆம் தேதி வரை குடும்ப அட்டைதார்கள் சார்ந்த நியாயவிலைக்கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஜனவரி 9 -ம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டவுடன், அன்றைய தினமே மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி, ஜனவரி 13 -ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. பொருள் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு 14 -ம் தேதி வழங்கப்பட உள்ளது.

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி


ஆட்சியர் ஆய்வு 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பதனிருப்பு கிராமத்தில் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பு நீளம் 6 அடி குறையாமல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Hyundai Creta Electric Range: என்னப்பா ரெடியா..! 4 வேரியண்ட்களில் க்ரேட்டா எலெக்ட்ரிக் எடிஷன் - ரேஞ்ச், பேட்டரி விவரங்கள்

இந்நிகழ்வில், வேளாண்மைதுறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

Continues below advertisement