Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (15.02.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
வாங்க மோடி, வரேன் டிரம்ப்.! அன்பு மட்டுமல்ல அலர்ட்டாக இருந்த 2 தலைவர்கள்: டாப் 5 முடிவுகள்..
மயிலாடுதுறை மின் கோட்டம்
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 15.02.2025 நாளை சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV சேத்தூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால், 11KV சேத்தூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காதல் எனும் முடிவிலி" காலமெல்லாம் காதல் நீடிக்க இதுவே போதும்! ஒரு காதல் பார்வை!
மின்நிறுத்த பகுதிகள்
எடக்குடி, பாலூர், சேத்தூர், கொடைவிளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நளை காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது. இதேபோன்று நாளையதினம் மயிலாடுதுறை கோட்டம், குத்தாலம், பாலையூர், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின்நிலையங்களில் 15.02.2025 சனிக்கிழமை நாளையதினம் மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பாலையூர், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம், முருகமங்கலம், மாங்குடி, வானாதிராஜபுரம், பேராவூர், பழையகூடலூர், அரையபுரம், சேத்திரபாலபுரம், திருவேள்விகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும்சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.