மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகிய உயிரிழந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் தனது வாழ்க்கை முடிந்து விட்டது எனக் கூறி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement


காவல்நிலைய வாசலில் நடைபெற்ற விபத்து


மயிலாடுதுறை மாவட்டம் ஆறுபாதி கிராமம் வேலாயுதம் தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி என்பவரின் 20 வயதான மகன் மணிவண்ணன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று நண்பரின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று விட்டு, சாப்பிடுவதற்காக மாலை செம்பனார்கோவில் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மது போதையில் இளைஞர் வாகனத்தை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. 


Income Tax Notice: இதெல்லாம் செஞ்சா வருமான வரி நோட்டீஸ் வரலாம்..! உங்களுக்கான வரம்புகள் என்ன?




இரண்டு துண்டாக முறிந்த மின்கம்பம்


இதனிடையே எதிரே வந்த வாகனம் எதிர்பாராத விதமாக மணிவண்ணன் ஒட்டி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகே உள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளார். இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்த நிலையில், மணிவண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி மாற்றம்! புதிய கமிஷனர் யார்?




சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழப்பு 


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு இரவு சிகிச்சை பலனின்றி மணிவண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும், காவல் நிலையம் முகப்பு பகுதியில் விபத்து நடந்து இருந்தும், காவல்நிலைய காவலர்கள் யாரும் உதவ முன் வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 


Crossover Cars: கிராஸ் ஓவர் கார்களுக்கு இந்தியாவில் அதிக டிமாண்ட் ஏன்? அப்படி என்ன தான் இருக்கு?




விபத்தில் சிக்கிய இளைஞரின் கதறல் 


இந்த சூழலில் விபத்துக்குள்ளான மணிவண்ணன் இறுதியாக தனது வாழ்க்கை முடிந்து விட்டது எனக் கூறி கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும், பார்பர்வர்களை மனதை கலங்க செய்துள்ளது. மதுபோதையில் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்துக்குள்ளாகி, பின்னர் வாழ்க்கை போய்விட்டது என இளைஞர் கதறியது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன் என்பது போல் ஆகியுள்ளது. மேலும் இது மதுபோதையில் வாகனம் இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Mumbai Rain: மும்பையில் இரவோடு இரவாக கொட்டிய பேய் மழை; மூழ்கிய சாலைகள்! தவிக்கும் பொதுமக்கள் - வீடியோவை பாருங்க